Tuesday, May 11, 2010

கருத்தரங்கு

சமீபத்தில் எல்லோரும் ஒன்று கூடினார்கள்
இது ஆச்சரியம் தான்
இருந்தாலும் உண்மை

எல்லோரும் தங்களை அறிமுகம் செய்தனர்
பழைய புதிய இடது சாரிகள் வலது சாரிகள்
இலக்கிய வாதிகள்
நாத்திக வாதிகள் ஆத்திக வாதிகள்
மதவாதிகள் சாதிய வாதிகள்
வைத்தியர்கள் பொறியியலாளர்கள்
இவ்வாறே லட்சம் வரை அறிமுகம் தொடர்ந்தது
புத்திஜீவிகள் கூட்டம் ஒன்று கூடியதால்
சிங்களவர்கள் சிலர் மிரண்டனர்
இருந்தும் எவர் ஒருவரும் தமிழர் என்று
அறிமுகம் செய்யாததால்
பயம் எதுவும் இல்லை என்று
சோலியை பார்க்க சென்றனர்

சென்றவர்களில் ஒருவன் கேட்டான்
என்ன தமிழர் எல்லோரும் ஒன்று கூடுகினம்?
அப்படி சொல்லப்படாது
அவங்களுக்கு தெரியாததை போதிக்க கூடாது
அமைதியாக நட என்று பதிலுரைத்தான்

பின்னர் இனப்பிரச்சனை குறித்த கருத்தரங்கு
மங்களவிளக்கேற்றலுடன் இனிதே ஆரம்பமாகி
மதியபோசனம் தேனீர் விருந்துடன் நிறைவுற்றது.

No comments:

Post a Comment