சமீபத்தில் எல்லோரும் ஒன்று கூடினார்கள்
இது ஆச்சரியம் தான்
இருந்தாலும் உண்மை
எல்லோரும் தங்களை அறிமுகம் செய்தனர்
பழைய புதிய இடது சாரிகள் வலது சாரிகள்
இலக்கிய வாதிகள்
நாத்திக வாதிகள் ஆத்திக வாதிகள்
மதவாதிகள் சாதிய வாதிகள்
வைத்தியர்கள் பொறியியலாளர்கள்
இவ்வாறே லட்சம் வரை அறிமுகம் தொடர்ந்தது
புத்திஜீவிகள் கூட்டம் ஒன்று கூடியதால்
சிங்களவர்கள் சிலர் மிரண்டனர்
இருந்தும் எவர் ஒருவரும் தமிழர் என்று
அறிமுகம் செய்யாததால்
பயம் எதுவும் இல்லை என்று
சோலியை பார்க்க சென்றனர்
சென்றவர்களில் ஒருவன் கேட்டான்
என்ன தமிழர் எல்லோரும் ஒன்று கூடுகினம்?
அப்படி சொல்லப்படாது
அவங்களுக்கு தெரியாததை போதிக்க கூடாது
அமைதியாக நட என்று பதிலுரைத்தான்
பின்னர் இனப்பிரச்சனை குறித்த கருத்தரங்கு
மங்களவிளக்கேற்றலுடன் இனிதே ஆரம்பமாகி
மதியபோசனம் தேனீர் விருந்துடன் நிறைவுற்றது.
No comments:
Post a Comment