Tuesday, May 11, 2010

நடந்தபடி...

காலம் ஒரு நாள்
என்
கைகளை பிடித்து
கொற கொறவென்று
இழுத்து சென்றது

எங்கே என்று நான்
கேட்டேன்
சோறு இருக்கும் இடத்தை
காட்டப்போவதாக சொன்னது

ஏன் புதுசாய் உனக்கிந்த வேலை?

இல்லை
இந்த வேலை எனக்கு புதிதில்லை

ஓ...

முன்பு யாரை இழுத்து சென்றாய்?

உன்னை பெற்றவரை இழுத்துச் சென்றேன்

இப்போது ஏன் என்னில் கரிசனை?

அவர்களுக்கு என்னுடன் நடக்கும் தென்பில்லை.

அவர்கள் என்னுடன் நடக்கும் போது
தலை சுற்றி விழத்தொடங்கிவிட்டார்கள்.

இதனால் உனக்கென்ன நட்டம்?
இருந்தும் நல்லதை செய்கின்றாயே !

என் வயலில் விதைப்பும் அறுவடையும் குறைந்து விட்டது
இது என் பெருநட்டம்
உனக்கு பசிக்கின்றது அதனால் இழுத்து செல்கின்றேன்

யார் நீ?
உன் வயிற்றுப்பசிக்கு மருந்து போடுபவன்
உனக்கு பசி இல்லையா?
உன்னிடம் இருந்து எடுத்துக் கொள்வேன்
எனது அசதிக்கும் களைப்பிற்கும் மருந்து உன்னிடம் உண்ணடா?
அது உன்னிடம் உள்ளது
என்னிடமா?
ம்ம்ம் வயிற்றுப்பசியை நினைத்துக்கொள்
மற்றவலி குறைந்துவிடும்

நீ கொடியவன் !!
வலிக்கு வலிதான் மருந்தா?
உனக்கு பசியும் வலியும் விழையாட்டா?

இல்லை
எனக்கு பசி உனக்கு வலி
உனக்கு வலி உனக்கு பசி
இது விதி

இல்லை உன் சதி

அது தான் விதி

மாற்ற முடியாதா?
என்போல் நீ மாற முடியும்
அப்போது நீ என்னும் பலருக்கு
சோறுக்கு வளிகாட்ட வேண்டும்

கொடுமை உணர்ந்தவன்
எப்படி கொடுமை உருவாக்குவது

வலிக்கு மருந்து
சுகத்துக்கு வழி
என்னுமொருவன் வலியில் இருந்தே பிறக்கின்றது

இல்லை
பிறப்பிக்கப்படுகின்றது

இருக்கட்டும்

எனக்கது தேவை இல்லை
அப்போ வலியோடு வாழ்

உன்னை கொல்வது என்
விதியாக இருக்கலாம்

என்னை கொல்வது
தீர்வாகுமா? இல்லை
என்னை கொன்றுவிட்டு
நீ என்போல் மாறாமல் இருப்பதே தீர்வு
உன்னால் முடியுமா?

முடியும்
ஆனால்
முடியாதவர்கள் பலர்

காரணம்??

தனி மனிதனும் நானே
சமூகமும் நானே
சமூகம் மாற வேண்டும்

ஆனால் விடமாட்டோம்

அது தான் உன்னை கொல்ல வேண்டும்

அதற்கு முதல் சமூகத்தை மாற்ற வேண்டும் அதற்கு
அனுமதியோம்
முரண்பாட்டை மூட்டிக்கொண்டே இருப்போம்

எனக்கு பசி எடுக்கின்றது
அதிகம் கதைக்க முடியவில்லை
சோறு காட்டுகின்றேன் நட

என்னுமொருவன் என் விட்ட இடத்தை தொடருவான்

அவனுக்கு பீட்சா காட்டுவோம்
கவலைப்படாமல் நட

No comments:

Post a Comment